Matthew 7

Matthew 7:1

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” மற்றும் “கட்டளைகள்” பன்மையில் உள்ளது.

நீங்கள் நியாயம் தீர்க்கப்படுவீர்கள்

நீங்கள் நியாயம் தீர்க்கப்படுவீர்கள்

செய்வினையில்: “தேவன் உங்களை கண்டிப்பார்” அல்லது “மக்கள் உங்களைக் கண்டிப்பார்கள்.”

...க்காக

வசனம் 2, வசனம் 1 றில் அடிப்படைகொண்டுள்ளது என்று வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அளவு

  1. தண்டனையின் அளவையோ அல்லது 2 நியாயத்தீர்புக்கான அளவுகோளாகவோ இருக்கலாம்.

Matthew 7:3

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” ஒருமையில் உள்ளது. அவற்றை பன்மையாக மொழிபெயர்க்கலாம்.

ஏன் பார்க்கிறாய் ... எப்படி சொல்லுகிறாய்

தங்களுடைய தவறுகளை அல்லது பாவங்களை முதலில் பார்க்கும்படி இயேசு அவர்களுக்கு சவால் விடுகிறார்.

வைக்கோல் புல்லின் சிறு துண்டு ... மரத்துண்டு

ஒருவனுடைய மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய தவறுகளுக்கான உருவணி.

சகோதரன்

இது சக விசுவாசியைக்குறிக்கும், சொந்த சகோதரனையோ, அருகில் வசிப்பவனையோ அல்ல

கண்

வாழ்க்கைக்கான உருவகம்

சிறு வைக்கோல் புல்லின் துண்டு

“கறை” அல்லது :துரும்பு”, அல்லது “சின்னத் துகள்”. கண்களில் இயல்பாக விழுவதைக் குறிக்கும் சிறு பொருளின் வார்த்தையைக் குறிப்பிடலாம்.

மரத்துண்டு

மரத்திலிருந்து வெட்டப்பட்ட பெரும்பகுதி. ஒருவனின் கண்ணிற்குள் உண்மையிலேயே ஒரு மரத்துண்டு புகமுடியாது.

Matthew 7:6

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.

நாய்கள் ... ஆண் பன்றி ...மிதிப்பது ... திரும்பி பீறுதல்

அநேகமாக ஆண் பன்றிகளே “மிதித்துப்போடும்”; நாய்கள் “திரும்பிப்” “பீறும்” (UDB).

நாய்கள் ... ஆண் பன்றி

இந்த மிருகங்கள் அசுத்தமானவைகள் என்று கருதப்பட்டு தேவன் அவைகளைப் புசிக்கக்கூடாது என்று இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார். பரிசுத்தமானதை கருத்தில் கொள்ளாத துன்மார்க்கர்களுக்கு இவை உருவணியாகும். இவைகளை அப்படியே மொழிபெயர்ப்பது நல்லது.

முத்துக்கள்

இவை உருண்டையான விலையேறப்பெற்ற அல்லது பாசிமணிகளுக்கு ஒப்பாயிருக்கிறது. இவைகள் தேவனை அறிகிற அறிவுக்கு அல்லது விலைமதிப்புள்ள பொருட்களுக்கு உவமானமாக இருக்கிறது.

Matthew 7:7

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.

கேளுங்கள் ...தேடுங்கள் ... தட்டுங்கள்

இந்த மூன்றும் உறுதியான ஜெபத்திற்கு உருவகமாக இருக்கிறது. தொடர்ந்து ஒரு காரியத்தை செய்வதைக் குறிக்க உங்கள் மொழியில் ஒரு படிவம் இருக்குமானால் அதை இங்கு பயன்படுத்துங்கள்.

கேளுங்கள்

தேவனிடம் வினவுங்கள்

தேடுங்கள்

“எதிர்பாருங்கள்” அல்லது “தேடுங்கள்”

தட்டுங்கள்

தட்டுவது

கதவில் தட்டுவது வீட்டிற்கு உள்ளே அல்லது அறைக்குள்ளே இருக்கும் நபரிடம் கதவைத் திறக்கும்படி நாகரீகமாக வினவுவது. கதவைத் தட்டுவது அநாகரீகம் என்றால், உங்கள் மொழியிலுள்ள அதற்கு நிகரான வார்த்தையைப் பயன்படுத்தவும். அல்லது “தேவன் கதவைத் திறக்கும்படி விரும்புவதாக தேவனிடம் தெரிவி.”

அல்லது ... அல்லது

இவை விடப்படலாம். ஏனென்றால் இயேசு தான் ஏற்கனவே வேறு வார்த்தைகளினால் சொன்னவற்றை திரும்ப சொல்லப்போகிறார் (UDB). இவைகள் தவிர்க்கப் படலாம்.

உங்களில் இருக்கும் எந்த மனிதன்

இந்த பதிலை எதிர்பார்க்காத கேள்வி, “உங்களில் ஒருவனும்” என்று அர்த்தப்படுகிறது.

ரொட்டித் துண்டு ... கல் ... மீன் ... பாம்பு

இவைகள் இருக்கிறவண்ணமாக மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

ரொட்டித் துண்டு

“ஏதோ ஒரு உணவு”

Matthew 7:11

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.

மனுஷர் உங்களுக்கு செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பும் காரியங்கள்

“உங்களிடத்தில் மற்றவர் நடந்து கொள்ள நீங்கள் விரும்பும் முறை” (UDB)

Matthew 7:13

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

இயேசு தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கலாம் என்று ஒரு கூட்ட மக்களோடு பேசிக்கொண்டிருக்கிறார். எல்லா “நீங்கள்” “உன்னுடைய” என்பவை பன்மையில் உள்ளது.

மொழிபெயர்க்கும்போது இரண்டு வாசல்கள் மற்றும் இரண்டு வழிகளுக்குண்டான வித்தியாசத்தை கூடுமானவரை பொருத்தமான வார்த்தைகள் “அகலம்” ,“விசாலம்” மற்றும் “குறுகல்” போன்ற வார்த்தைகளுக்குப் பயன்படுத்தி அழுத்தம் திருத்தமாக சொல்லவும்.

குறுகலான வாசல் வழியாய் பிரவேசியுங்கள்

“ஆகையால், குறுகலான வாசல் வழியாய்ப் பிரவேசியுங்கள்” என்பதை வசனத்தின் கடைசியில் மாற்றி வைக்கவும்.

வாசல் ... வழி

இது, மனுஷர் நடக்கும் “வழி,” “வாசலை” சென்றடைதல் மற்றும் “வாழ்வு” அல்லது “அழிவில்” (UDB) பிரவேசித்தல் என்பதற்கான உருவணியாகும். அதனால் “அழிவிற்கு செல்லும் பாதை விசாலமானது மற்றும் அதற்கு செல்லும் வாசல் அகலமானது” என்று மொழிபெயர்க்கவும்”. வாசல், வழி ஆகியவை யின் வரிசை மாற்றவேண்டாம்.

வாசல் அகலமும், பாதை விசாலமுமாய் இருக்கிறது ... வாசல் குறுகலும், வழி இடுக்கமுமாக இருக்கிறது.

வினைச்சொல்லுக்கு முன்பு ULB பெயரெச்சங்களை இட்டிருக்கிறது. ஏனென்றால் பெயரெச்சங்கள் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தைக் காட்டவே. பெயரெச்சங்களை வித்தியாசம் காட்டும் முறையில் உங்கள் மொழிபெயர்ப்பை அமையுங்கள்.

அழிவு

அழிகின்ற மனுஷரைக் குறிக்கும் ஒரு பொதுவானச் சொல் இது. இந்த சந்தர்ப்பத்தில் இது உடல் மரணத்தைக் குறிக்கிறது. இது நித்திய மரணத்திற்கான உருவணி ஆகும். நிதர்சன “வாழ்க்கைக்கு” எதிர்ப்பதமாகும். இது நித்திய வாழ்விற்கான உருவணி ஆகும்.

Matthew 7:15

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

ஜாக்கிரதையாயிருங்கள்

“எச்சரிக்கையாயிருங்கள்”

அவர்கள் கனிகளால்

இயேசு தீர்க்கதரிசிகளின் செயல்பாடுகளை ஒரு செடியின் கனிகளுக்கு ஒப்பிடுகிறார். மறு மொழிபெயர்ப்பு: “அவர்கள் செயல்படும் முறை”

மனுஷர் சேர்ப்பாரோ ...?

“மனுஷர் பறிக்கமாட்டார் ...” இயேசு பேசிக்கொண்டிருக்கும் மனுஷர்கள் விடை இல்லை என்பதைத் தெரிந்திருப்பர்.

நல்ல மரம் நல்லக் கனிகளைக் கொடுக்கும்

இயேசு தீர்க்கதரிசிகளின் செயல்பாடுகளை ஒரு செடியின் கனிகளுக்கு ஒப்பிடுகிறதைத் தொடர்ந்தார்.

கெட்ட மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கும்

இயேசு கள்ளத்தீர்க்கதரிசிகளின் கள்ளச்செயல்பாடுகளைக் குறிக்க ஒரு செடியின் கனியை உருவணியாகப் பயன்படுத்துகிறார்.

Matthew 7:18

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்

இயேசு கள்ளத்தீர்க்கதரிசிகளின் கள்ளச்செயல்பாடுகளைக் குறிக்க ஒரு செடியின் கனியை உருவணியாகப் பயன்படுத்துகிறார். இங்கு, கெட்ட மரங்களுக்கு என்ன நடக்கும் என்பதை மட்டும் குறிப்பிடுகிறார். கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு இவ்வாறே நடக்கும் என்பது மறைத்து சொல்லப்பட்டிருக்கிறது.

அவர்கள் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்.

“அவர்கள் கனிகள்” தீர்க்கதரிசியையோ அல்லது மரங்களையோ குறிக்கலாம். இந்த உருவகம் மரங்களின் கனிகளும் தீர்க்கதரிசியின் செயல்களும் அவர்கள் நல்லவர்களா ?அல்லது கள்வர்களா ?என்பதைச் சொல்லுகிறது. ஒன்றை மட்டும் குறிக்கும் வகையில் மொழிபெயர்க்க முடியுமானால் அப்படி செய்யவும்.

Matthew 7:21

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

என் பிதாவின் சித்தம் செய்கிறவன் எவனோ

“என் பிதா விரும்புவதைச் செய்கிறவன் எவனோ”

நாம்

இது இயேசுவை உள்ளடக்கவில்லை

அந்த நாளில்

“அந்த நாள்” என்று இயேசு சொன்னதன் காரணம் என்னவென்றால் தன்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் நியாயத்தீர்ப்பின் நாளைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொள்வார்கள் என்று அறிந்திருந்தார். நீங்கள் இந்த உண்மையை (UDB இல் உள்ளது போல) வாசிப்பவர்கள் இயேசு எந்த நாளைக் குறித்து பேசுகிறார் என்பதைப் பற்றி தெரியவில்லை என்றால் சேர்த்துக்கொள்ளவும்.

Matthew 7:24

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

ஆகையால்

“அக்காரணத்தினால்”

கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டும் புத்தியுள்ள மனுஷன்

இயேசு தனக்குக் கீழ்படிகிறவர்களைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டும் புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுகிறார். மழையோ, காற்றோ, பெருவெள்ளமோ வீட்டை அணுகினாலும் , வீடு இடிந்து விடாது.

கன்மலை

இது களிமண் அல்லது மண்ணுக்கு அடியிலுள்ள பாறை ஆகும். மாறாக இது நிலத்துக்கு மேல் உள்ள பாறை அல்ல.

Matthew 7:26

இயேசு தன் சீடர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுத்தார் . இந்த சம்பவம் மத்தேயு 5:1 இல் துவங்குகிறது.

மணலின் மேல் தன் வீட்டைக்கட்டும் புத்தியில்லாத மனுஷனைப்போல்

அதே உருவகத்தை இங்கும் தொடர்கிறார். இயேசு தனக்குக் கீழ்படியாதவர்களை மணலின் மேல் தன் வீட்டைக் கட்டும் புத்தியில்லாதவனுக்கு ஒப்பிடுகிறார். மழையும், வெள்ளமும்., காற்றும் வாரிக்கொண்டு போகும் மணலின் மீது புத்தியில்லாதவன் தான் தன் வீட்டைக் கட்டுவான்.

விழுந்தது

வீடு விழும்போது என்ன நடக்கும் என்பதைக் குறிக்கும் ஒரு பொது வார்த்தையை பயன்படுத்தவும்.

அதன் வீழ்ச்சி பெரிதாக இருந்தது.

மழையும், வெள்ளமும், காற்றும் வீட்டை முழுவதும் அழித்தது.,

Matthew 7:28

அப்படியே ஆயிற்று

உங்கள் மொழியில் ஒரு கதையின் புதுப் பகுதியின் துவக்கத்தை குறிக்கும் வார்த்தை இருக்குமானால் இங்கு பயன்படுத்தவும்.